Breaking News
recent

மாவீரர் நினைவுச் சின்னம்-காணொளி


கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர்.

இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர்.

எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம்.

இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை நிலையங்களிலும், பொது இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''


தமிழ் இளையோர் அமைப்பு - கனடா
எல்லாளன்

எல்லாளன்

No comments:

Post a Comment

Powered by Blogger.